• Tue. Nov 4th, 2025

24×7 Live News

Apdin News

எஸ்ஐஆர் பணிக்கு முழு ஒத்துழைப்பு: அரசியல் கட்சிகளிடம் மாவட்ட தேர்தல் அதிகாரி வேண்டுகோள் | District Election Officer requests for cooperation from political parties for SIR work

Byadmin

Nov 4, 2025


சென்னை: சென்னை மாவட்​டத்​தில் நடை​பெறும் எஸ்​ஐஆர் பணிக்​கு, அரசி​யல் கட்​சிகள் முழு ஒத்​துழைப்பு அளிக்க வேண்​டும் என்று மாவட்ட தேர்​தல் அதி​காரி ஜெ.குமரகுருபரன் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார். வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தத்துக்​கான பணி​கள் (எஸ்​ஐஆர்) இன்று முதல் தமிழகம் முழு​வதும் தொடங்​கு​கின்றன. இதை முன்​னிட்​டு, சென்னை மாவட்ட தேர்​தல் அலு​வல​கம் சார்​பில், அங்​கீகரிக்​கப்​பட்ட அரசி​யல் கட்​சிகளின் பிர​தி​நி​தி​களு​ட​னான ஆலோ​சனை கூட்​டம், ரிப்​பன் மாளி​கை​யில், மாவட்ட தேர்​தல் அலு​வலர் ஜெ.குமரகுருபரன் தலை​மை​யில் நேற்று நடை​பெற்​றது.

இந்த கூட்​டத்​தில் திமுக, காங்​கிரஸ், சிபிஐ, சிபிஎம், அதி​முக, பாஜக, ஆம் ஆத்மி உள்​ளிட்ட அரசி​யல் கட்​சிகளின் பிர​தி​நி​தி​கள் பங்​கேற்​றனர். இதில் சென்னை மாவட்​டத்​தில் உள்ள 16 சட்​டப்​பேரவை தொகு​தி​களில் வீடு வீடாக தேர்​தல் அதி​காரி​கள், வாக்​குச்​சாவடி அலு​வலர்​கள் மேற்​கொள்ள இருக்​கும் பணி​கள்​, தொடர்​பாக விளக்​கப்​பட்​டது. கூட்​டத்​தில் பேசிய மாவட்ட தேர்​தல் அதி​காரி ஜெ.குமரகுருபரன், இந்த எஸ்​ஐஆர் பணிக்கு அரசி​யல்​கள் கட்​சிகள் முழு ஒத்​துழைப்பு அளிக்க வேண்​டும் என்​றார்.

பின்​னர், அரசி​யல் கட்​சிகளிடம் கருத்​துகள் கேட்​கப்​பட்​டன. அப்​போது, ஒவ்​வொரு கட்சி சார்​பில், 2 பிர​தி​நி​தி​கள் அழைக்​கப்​பட்​டிருந்த நிலை​யில், அதி​முக சார்​பில் 4 பிர​தி​நி​தி​கள் வந்​திருந்​தனர். அதற்கு திமுக உள்​ளிட்ட கட்​சிகள் எதிர்ப்பு தெரிவிக்​கவே, அதி​முகவை சேர்ந்த மாவட்ட செய​லா​ளர்​கள் ஆர்​.எஸ்​. ​ராஜேஷ், விருகை ரவி ஆகியோர் வெளி​யேறினர். தி.நகர் சத்​யா, பால​கங்கா ஆகியோர் கூட்​டத்​தில் பங்​கேற்​றனர்.

கூட்​டம் முடிந்த பின், செய்​தி​யாளர்​களிடம் பேசிய திமுக மாநில சட்​டத்​துறை துணை செய​லா​ளர் கே.சந்​துரு, “எந்த ஒரு புரிதலும் இல்​லாமல் தமிழகத்​தில் நுழைய வேண்​டும் என்​ப​தற்​காக, பாஜக அரசு தேர்​தல் ஆணை​யத்தை கைப்​பாவை​யாக மாற்றி உள்​ளது” என தெரி​வித்​தார். மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மத்​திய சென்னை மாவட்ட செய​லா​ளர் ஜி.செல்வா பேசும் போது, ஜனநாயகத்​துக்கு எதி​ரான முறை​யில் தேர்​தல் ஆணை​யம் செயல்​பட்டு வரு​கிறது.

நாடாளு​மன்​றத்​தின் ஜனநாயகத்தை பறிக்​கக் கூடிய வேலை​யில் பாஜக அரசு செயல்​படு​கிறது. எஸ்​ஐஆர்-ஐ மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி முழு​வது​மாக எதிர்க்​கிறது. மிகப்​பெரிய சிக்​கலை தேர்​தல் ஆணை​யம் உரு​வாக்​கி​யுள்​ளது. அது மிகப்​பெரிய கண்​டனத்​துக்​குரியது” என்​றார். அதனைத் தொடர்ந்​து, காங்​கிரஸ் கட்​சி​யின் வழக்​கறிஞர் அணி துணைத் தலை​வர் நவாஸ் பேசும்​போது, காங்​கிரஸ் கட்சி சார்​பில் எஸ்​ஐஆர்-க்கு எங்​கள் கண்​டனங்​களை தெரி​வித்​துக் கொண்​டோம்.

நடை​முறை சாத்​தி​யமில்​லாத வேலையை பாஜக​வும், தேர்​தல் ஆணை​ய​மும், தமிழகத்​தில் நடக்க உள்ள சட்​டப்பேரவை தேர்​தலை சீர்​குலைக்​கும் வகை​யில் செயல்​படு​கிறது. தேர்​தல் ஆணை​யம் உள்​நோக்​கத்​தோடு செயல்​படு​கிறது என்​றார். அதி​முக மாவட்ட செய​லா​ளர் விருகை ரவி பேசும்​போது, எஸ்​ஐஆர்-ஐ அதி​முக முழு​மை​யாக ஆதரிக்​கிறது. வாழ்​வா​தா​ரத்​துக்​காக தமிழகம் வந்​துள்ள வடமாநில தொழிலா​ளர்​களை வாக்​காளர் பட்​டியலில்​ சேர்த்​துக்​ கொள்​வதை அதி​முக ஏற்​றுக்​ கொள்​கிறது என்​றார்​.



By admin