• Mon. Jul 6th, 2026

24×7 Live News

Apdin News

எஸ்.முரளிதர்: பாலத்தீன விவகாரத்தில் இஸ்ரேலின் மறுப்புக்கு அளித்த பதில்

Byadmin

Jul 6, 2026


ஒடிசா உயர் நீதிமன்றம், முன்னாள் நீதிபதி எஸ். முரளிதர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில், பாலத்தீனர்கள், இஸ்ரேல், மனித உரிமை, மத்திய கிழக்கு

பட மூலாதாரம், UNHRC

படக்குறிப்பு, ஒடிசா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி எஸ். முரளிதர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலின் சர்வதேச விசாரணை ஆணையத்தின் தலைவராகப் பணியாற்றியுள்ளார்

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

“அறிக்கையைத் தயாரிக்கும்போது நான் ஏன் இஸ்ரேலிய படையினரிடம் பேசவில்லை என்று பலர் கேட்கிறார்கள். இஸ்ரேலிய படையினர் எங்களிடம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகிடமும் தங்களுக்காகப் பேசினார்கள். அவர்கள் குழந்தையைக் கொன்றுவிட்டு, அதைப் பெருமையாகக் கருதி வீடியோ பதிவு செய்தார்கள்.”

இவை, இந்தியாவின் புகழ்பெற்ற சட்டத்துறை வல்லுநரும், ஒடிசா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியுமான எஸ். முரளிதரின் வார்த்தைகள் ஆகும். இவர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் சுயாதீன சர்வதேச விசாரணை ஆணையத்தின் தலைவராக இருந்து, காஸாவில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள் குறித்த முக்கியமான ஓர் அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.

இந்த அறிக்கையில், காஸாவில் பாலத்தீனக் குழந்தைகளை இஸ்ரேல் திட்டமிட்டும், வேண்டுமென்றே குறிவைத்தும் தாக்கியுள்ளது என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

காஸாவில் பாலத்தீன மக்களின் எதிர்காலத்தையும் அவர்களின் இருத்தலையும் அழிப்பதே இந்தத் தாக்குதல்களின் நோக்கம் என்று ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்த அறிக்கையை இஸ்ரேல் நிராகரித்துள்ளது.

தனது நான்கு தசாப்த கால நீண்ட பணிகாலத்துக்குப் பிறகு, நீதிபதி முரளிதர் ஒடிசா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். அதன் பிறகு, அவர் மீண்டும் வழக்கறிஞராகத் தனது பணியைத் தொடங்கினார்.

By admin