• Sat. May 31st, 2025

24×7 Live News

Apdin News

ஏஎம்சிஏ: இந்தியாவுக்கு ஐந்தாம் தலைமுறை போர் விமானம் ஏன் அவசியம்? அதன் தயாரிப்பு எந்த கட்டத்தில் உள்ளது?

Byadmin

May 30, 2025


AMCA, இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை போர் விமானம்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, எதிர்காலத்தில் போர்களில் விமானப்படை ஒரு முக்கியப் பங்கு வகிக்கும் என்று பாதுகாப்பு ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

  • எழுதியவர், ஷக்கீல் அக்தர்
  • பதவி, பிபிசி செய்தியாளர்

இந்திய பாதுகாப்பு அமைச்சகம் சமீபத்திய ‘ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த்’ போர் விமானங்களின் உள்நாட்டுத் தயாரிப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது. (ஸ்டெல்த் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ‘ரகசிய’ என்று அர்த்தம். எதிரிகளே அறியாத வகையில் அவர்களின் ரேடார்களுக்கு சிக்காமல் எதிரி நாட்டிற்குள் ஊடுருவக் கூடியவை)

இதுவரை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மட்டுமே ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்களை உருவாக்கியுள்ளன.

இந்திய பாதுகாப்பு நிபுணர்களின் கூற்றுப்படி, இது இந்திய விமானப்படையின் திறனை அதிகரிக்கும் ஒரு பெரிய திட்டம் ஆகும். தனியார் நிறுவனங்களும் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ‘மேம்பட்ட நடுத்தர போர் விமானம்’ (AMCA) மாதிரிக்கு ஒப்புதல் அளித்துள்ளார். அதன் பொறுப்பு இந்திய அரசின் ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சிக்கு (ADA) வழங்கப்பட்டுள்ளது.

By admin