• Mon. Jun 1st, 2026

24×7 Live News

Apdin News

ஏஎம்சிஏ: இந்தியா ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை தயாரிக்க என்ன செய்கிறது?

Byadmin

Jun 1, 2026


ஏஎம்சிஏ திட்டம், இந்தியா, ஐந்தாம் தலைமுறை போர் விமானம்

பட மூலாதாரம், Reuters

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்

இந்தியா தனது சொந்த மேம்பட்ட போர் விமானத்தை உருவாக்கும் திட்டம் குறித்து மே 27 அன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது.

அதிநவீன ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தின் (AMCA) ஐந்து ப்ரோரோடைப் (மாதிரி வடிவங்கள்) உருவாக்கப்படும் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ப்ரோடோடைப் என்பது, முழு அளவிலான உற்பத்தி தொடங்குவதற்கு முன் உருவாக்கப்பட்டு, சோதிக்கப்படும் ஒரு விமானத்தின் ஆரம்பக்கட்ட மாதிரி வடிவமாகும்.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த, அமைச்சகம் மூன்று தனியார் துறை நிறுவனங்களைத் தேர்வு செய்துள்ளது. அவை, டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் (Tata Advanced Systems), எல்&டி-பெல்-டைனமாடிக் கூட்டமைப்பு (L&T-BEL-Dynamatic Consortium), பாரத் ஃபோர்ஜ்-பி.இ.எம்.எல்-டேட்டா பேட்டர்ன்ஸ் கூட்டமைப்பு (Bharat Forge-BEML-Data Patterns Consortium) ஆகியவையாகும்.

இந்த முடிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், அமெரிக்காவும் ரஷ்யாவும் தங்கள் மேம்பட்ட போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்க முன்வந்திருந்தன. அமெரிக்காவில் இருந்து எஃப்-35, ரஷ்யாவில் இருந்து சுகோய்-57 ஆகிய விமானங்களை வழங்க முன்வந்திருந்தன. இருப்பினும், இந்தியா அடுத்த தலைமுறை போர் விமானத்தை உள்நாட்டிலேயே உருவாக்கும் முயற்சியில் முன்னோக்கிச் செல்ல முடிவெடுத்துள்ளது.

இந்திய அரசுக்குச் சொந்தமான விமான உற்பத்தி நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) இத்திட்டத்தின் தற்போதைய கட்டத்திற்குத் தேர்வு செய்யப்படவில்லை என்பது இந்த அறிவிப்பின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாக உள்ளது.

By admin