• Fri. Jun 20th, 2025

24×7 Live News

Apdin News

ஏர் இந்தியா விமான விபத்து பற்றிய புலனாய்வு எப்படி நடைபெறும்? விளக்கும் நிபுணர்கள்

Byadmin

Jun 20, 2025


விபத்துக்குள்ளான ஏர் இந்தியா போயிங் 787

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ஜூன் 12ஆம் தேதியன்று, ஆமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 787, டிசம்பரில் மெல்போர்ன் நகருக்கு மேலே பறந்தபோது…

வெறும் 40 விநாடிகளுக்கும் குறைவான நேரம்…

ஆமதாபாத்தில் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் விழுந்து நொறுங்கிய ஏர் இந்தியா விமானமான AI171, சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டதற்கும் 1.5 கி.மீ தூரத்தில் விபத்துக்கு உள்ளாவதற்கும் இடையில் இருந்த நேரம் 40 நொடிகளுக்கும் குறைவானதுதான்.

தற்போது விபத்து தொடர்பான விசாரணையை மேற்கொண்டுள்ள புலனாய்வாளர்கள் விமானத்தின் சிதைவுகளை ஆராயும் கடினமான பணியை மேற்கொண்டுள்ளனர். விமானம் புறப்பட்ட சில விநாடிகளில் விபத்து நடைபெறும் அளவுக்கு நடந்த மாபெரும் தவறு என்ன என்பதைக் கண்டறிய, விமானத்தின் காக்பிட் குரல் (விமானிகள் விமானத்தை இயக்கும் அறையில் பதிவாகும் உரையாடல்கள்) மற்றும் விமான தரவுப் பதிவுகளை ஆராயும் பணி விபத்துக்கான காரணத்தைக் கண்டறிவதில் முக்கியமானது.

முதல்கட்ட விசாரணை அறிக்கை 30 நாட்களுக்குள் வெளியிடப்பட வேண்டும், இறுதி அறிக்கை 12 மாதங்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பது ஐ.நா. விமானப் போக்குவரத்து அமைப்பான ஐ.சி.ஏ.ஓ வகுத்துள்ள சர்வதேச விதிகள்.

By admin