1
மட்டக்களப்பு, ஏறாவூர்பற்று பிரதேச சபையின் தவிசாளர், பிரதித் தவிசாளர் தெரிவு இன்று பிரதேச சபையின் மண்டபத்தில் (செங்கலடியில்) இடம்பெற்றது.
அதன்படி இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த முத்துப்பிள்ளை முரளிதரன் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.
அதேவேளை, பிரதித் தவிசாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சின்னத்துரை சர்வானந்தன் தெரிவு செய்யப்பட்டார்.