• Sat. Mar 7th, 2026

24×7 Live News

Apdin News

ஐஆர்ஐஎஸ் புஷெர்: இலங்கையில் நிறுத்தப்பட்ட இரான் போர் கப்பலின் தற்போதைய நிலை என்ன?

Byadmin

Mar 7, 2026


புஷெர் கப்பல்

பட மூலாதாரம், SL NAVY

படக்குறிப்பு, புஷெர் கப்பல்

இரான் கடற்படை கப்பல் ஒன்று இலங்கை அருகே அமெரிக்காவால் மூழ்கடிக்கப்பட்ட நிலையில் இரண்டாவது கப்பலுக்கு இலங்கை அரசு அடைக்கலம் கொடுத்துள்ளது. அதன் பணியாளர்கள் இலங்கையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சூழலில் இலங்கையில் இருக்கும் இரானிய கடற்படையினரை அவர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என இலங்கையிடம் அமெரிக்க அரசு கூறியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

இலங்கை, இரான் கப்பல், அமெரிக்கா

பட மூலாதாரம், AP

படக்குறிப்பு, ஐஆர்ஐஎஸ் தேனா கப்பல் (கோப்புப் படம்)

இரான் கப்பலில் உயிரிழந்தவர்கள், மீட்கப்பட்டவர்களின் நிலை என்ன?

இலங்கையை அண்மித்த கடல் பரப்பில் ஐஆர்ஐஎஸ் தேனா என்ற இரானிய கப்பல் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த 84 பேரின் சடலங்கள் மீதான மரண பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாக காலி துறைமுக போலீஸார் காலி நீதவான் முன்னிலையில் விடயங்களை தெளிவுப்படுத்தியிருந்தனர்.

இதன்படி, சடலங்கள் மீது மரண பரிசோதனையை நடத்துமாறு நீதவான், காலி தேசிய மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரிக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதேவேளையில், தாக்குதலுக்கு இலக்கான கப்பலிலிருந்து மீட்கப்பட்ட 32 பேரும், காலி தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் ஒருவரின் நிலைமை மாத்திரம் கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

By admin