• Fri. Mar 6th, 2026

24×7 Live News

Apdin News

ஐஆர்ஐஎஸ் புஷெர்: இலங்கை அருகே இரானின் மற்றொரு போர்க்கப்பல் – என்ன நடக்கிறது?

Byadmin

Mar 6, 2026


ஐஆர்ஐஎஸ் புஷெர், இரான், அமெரிக்கா, இலங்கை

பட மூலாதாரம், Supplied

படக்குறிப்பு, இரானியக் கப்பலான ஐஆர்ஐஎஸ் புஷெரில் இருந்த 204 பேர் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது

இலங்கை தனது கடற்கரைப் பகுதியில் இரானிய கடற்படைக் கப்பல் ஒன்றைக் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருப்பதாக தெரிவித்துள்ளது. இரானிய போர்க்கப்பல் ஒன்று அதே கடல் பகுதியில் அமெரிக்காவால் மூழ்கடிக்கப்பட்டு, குறைந்தது 87 பேர் உயிரிழந்ததற்கு ஒரு நாள் கழித்து, இலங்கை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

ஐஆர்ஐஎஸ் புஷெர் (IRIS Bushehr) என்ற அந்த இரானிய கப்பல், அதன் இயந்திரங்களில் ஒன்று பழுதடைந்ததால் இலங்கையின் துறைமுகங்களில் ஒன்றில் நிறுத்த புதன்கிழமை (மார்ச் 4) அனுமதி கோரியிருந்தது.

பல மணி நேர விவாதத்திற்குப் பிறகு வடகிழக்கு துறைமுகம் ஒன்றில் கப்பலை நிறுத்துவதற்கு இலங்கை அனுமதி அளித்தது, “மனிதநேயத்தைப் பாதுகாக்க நாங்கள் ஒருபோதும் தயங்க மாட்டோம்” என்று இலங்கை அதிபர் அநுரகுமார தெரிவித்தார்.

அந்தக் கப்பலில் இருந்த சுமார் 204 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை, பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளது.

‘எந்தப் பக்கமும் சாயப் போவதில்லை’- இலங்கை

இரானுக்கு எதிராக அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல் நீடிக்கும் நிலையில், எந்தப் பக்கமும் சாயப்போவதில்லை என்று கூறி தங்களது நடுநிலைமையை இலங்கை வலியுறுத்தியுள்ளது.

By admin