• Sun. Jun 8th, 2025

24×7 Live News

Apdin News

ஐஆர்சிடிசி: ரயில் தட்கல் டிக்கெட் பெறுவது சிரமமாக இருக்கிறதா? பின்னணியில் இருக்கும் மோசடி என்ன?

Byadmin

Jun 7, 2025


ஐஆர்சிடிசி, டிக்கெட் முன்பதிவு, தட்கல் புக்கிங், முறைகேடு, ரயில்வே, தெற்கு ரயில்வே

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தட்கல் புக்கிங் முறைகேடு

“கடந்த ஏப்ரல் 7 அன்று கோவையில் ஒரு திருமண நிகழ்வுக்கு செல்வதற்குத் திட்டமிட்டிருந்தேன். ரயிலில் பயணிப்பதற்கு இருமுறை தட்கல் முன்பதிவுக்கு முயற்சி செய்தேன். ஆனால், அது அவ்வளவு எளிதாக இல்லை. வேறு வழியின்றி தனியார் பேருந்தில் பயணித்தேன்” எனக் கூறுகிறார், செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் வசிக்கும் சரவணன் கார்த்திகேயன்.

“தன்னைப் போல, அவசர பயணம் மேற்கொள்ள நினைக்கும் எவருக்கும் தட்கல் டிக்கெட் விரைவாக கிடைப்பதில்லை” எனவும் அவர் குறிப்பிட்டார்.

தட்கல் முன்பதிவில் கோடிக்கணக்கான போலி பயனர்களால் தனி நபர்கள் அதிகம் சிரமப்படுவதாக கூறுகிறது, ரயில்வே நிர்வாகம்.

இதைக் களைவதற்கு விரைவில் இ-ஆதார் நடைமுறையை அமல்படுத்த உள்ளதாகக் கூறுகிறார், இந்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ். இதனால் ரயில் டிக்கெட் பெறுவதில் உள்ள மோசடிகள் களையப்படுமா?



By admin