• Sat. Nov 8th, 2025

24×7 Live News

Apdin News

ஐஎச்பில்: கெய்ல் பங்கேற்ற தொடரில் ஊதியம் தராமல் பாதியில் ஓடிய அமைப்பாளர்கள் – என்ன நடந்தது?

Byadmin

Nov 8, 2025


காஷ்மீர் - கிரிக்கெட் லீக் நிறுத்தம்

பட மூலாதாரம், Muheeb Malik

படக்குறிப்பு, தொடரின் அமைப்பாளர்கள் போட்டியை பாதியில் கைவிட்டுவிட்டு, ஊதியத்தையும், ஹோட்டல் பில்களையும் கட்டாமல் ஓடிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஒரு தனியார் கிரிக்கெட் லீக் காஷ்மீரில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தொடரின் அமைப்பாளர்கள் போட்டியை பாதியில் கைவிட்டுவிட்டு, ஊதியத்தையும், ஹோட்டல் பில்களையும் கட்டாமல் ஓடிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தியன் ஹெவன் பிரீமியர் லீக் ( Indian Heaven Premier League – IHPL) தொடர் பஞ்சாப் இளைஞர் சங்கம் என்ற அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த கிரிக்கெட் தொடருக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. கிறிஸ் கெய்ல், டெவோன் ஸ்மித் போன்ற சர்வதேச நட்சத்திரங்கள் தொடக்க போட்டிகளில் விளையாட, அவர்களோடு உரையாடும் வாய்ப்பு உள்ளூர் வீரர்களுக்குக் கிடைத்தது.

ஆனால் ஒரு சில போட்டிகளுக்குப் பிறகு இந்தத் தொடர் நிறுத்தப்பட்டது. ஹோட்டல் உரிமையாளர்களும் வீரர்களும் பணத்தைப் பெற திணறியதாக சொல்லப்படுகிறது.

இந்தத் தொடரின் அமைப்பாளர்கள் நவம்பர் ஒன்றாம் தேதி காஷ்மீரை விட்டு வெளியேறிவிட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. அதுவரை மொத்தம் 12 போட்டிகளே நடந்திருந்தன. அக்டோபர் 25-ஆம் தேதி தொடங்கிய இந்தத் தொடர் நவம்பர் 8-ஆம் தேதி வரை நடப்பதாக இருந்தது.

By admin