• Sun. Mar 9th, 2025

24×7 Live News

Apdin News

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்: 2 இந்தியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றம் – சிறையில் இருக்கும் பிறரின் நிலை என்ன?

Byadmin

Mar 7, 2025


ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தியர்கள், மரண தண்டனை,

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இரண்டு இந்தியர்களுக்கு தற்போது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர்கள்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், மார்ச் 5ஆம் தேதியன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கேரளாவை சேர்ந்த முகமது ரினாஷ், முரளிதரன் பி.வி ஆகிய இருவருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

ரினாஷ் ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த ஒருவரைக் கொலை செய்ததற்காகவும், முரளிதரன் இந்தியாவை சேர்ந்த ஒருவரை கொலை செய்ததற்காகவும் இந்தத் தண்டனை அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, பிப்ரவரி 15ஆம் தேதி அன்று இந்தியாவை சேர்ந்த ஷாஜாதி கான் என்பவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. அவருக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மார்ச் 5ஆம் தேதியன்று இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

By admin