• Mon. Apr 7th, 2025

24×7 Live News

Apdin News

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக மீண்டும் சஜித் தெரிவு!

Byadmin

Apr 4, 2025


ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் பிரேமதாஸ மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாடு கொழும்பில் நடைபெற்றபோதே இந்தத் தெரிவு இடம்பெற்றுள்ளது.

அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக சஜித் பிரேமதாஸவின் விசேட வேண்டுகோளின் பிரகாரம் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை, பொதுச்செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டார மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தேசிய அமைப்பாளராக திஸ்ஸ அத்தநாயக்க மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பொருளாளராக கலாநிதி ஹர்ஷ டி சில்வாவும், செயற்பாட்டுப் பிரதானியாக நளின் பண்டாரவும் மாநாட்டில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

நடப்பாண்டுக்கான புதிய தேசிய செயற்குழு உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

By admin