• Wed. Jan 28th, 2026

24×7 Live News

Apdin News

ஐசிசி டி20 உலகக்கோப்பையை பாகிஸ்தான் புறக்கணித்தால் யாருக்கு என்ன பாதிப்பு?

Byadmin

Jan 28, 2026


பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், ஐசிசி, கிரிக்கெட்

பட மூலாதாரம், X/MOHSIN NAQVI

அடுத்த மாதம் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடருக்கு தங்களுடைய அணியை அனுப்புவது தொடர்பான முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வருகிற வெள்ளிக்கிழமை அல்லது திங்கட்கிழமை வரை ஒத்திவைத்துள்ளது.

தொடரை முழுமையாக புறக்கணிப்பது தொடங்கி இந்தியாவுக்கு எதிரான போட்டியை மட்டும் புறக்கணிப்பது வரை அனைத்து வாய்ப்புகளையும் பாகிஸ்தான் நிர்வாகிகள் பரிசீலித்து வருவதாக பிபிசி விளையாட்டு செய்தியாளர் டிமோத்தி ஆப்ரஹாம் தெரிவிக்கிறார்.

கடந்த திங்கட்கிழமை பாகிஸ்தான் பிரதமரைச் சந்தித்த பிறகு பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மொஹ்சின் நக்வி, “பிரதமர் அனைத்து வாய்ப்புகளையும் கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தை தீர்க்குமாறு அறிவுறுத்தியதாக” தெரிவித்தார்.

வங்கதேச அணி இந்தியாவில் விளையாட மறுத்ததைத் தொடர்ந்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து அந்த அணியை நீக்கி அதன் இடத்தில் ஸ்காட்லாந்து அணியைச் சேர்த்தது.

ஐசிசியின் இந்த முடிவை ‘நியாயமற்றது’ என்றும் ‘இரட்டை நிலைப்பாடு’ கொண்டது என்றும் மொஹ்சின் நக்வி விமர்சித்திருந்தார். மற்ற அனைவருக்குமான விதிகளே வங்கதேசத்திற்கும் பொருந்த வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

By admin