• Thu. Mar 26th, 2026

24×7 Live News

Apdin News

ஐ.நா வதிவிட பிரதிநிதிக்கும் தமிழ்த் தேசிய பேரவையினருக்கும் இடையிலான சந்திப்பு

Byadmin

Mar 26, 2026


ஐ.நா. வதிவிட பிரதிநிதிக்கும் தமிழ்த் தேசிய பேரவையினருக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

கடந்த ஒரு வாரகாலமாக வடக்கில் தங்கியிருந்து பல்வேறு தரப்பினரை சந்தித்து வரும்  இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி. மார்க் அன்றி பிரான்சிக்கும் தமிழ்த் தேசியப் பேரவை உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு  வியாழக்கிழமை (26) யாழ்ப்பாணம் தாவடிப் பகுதியில் அமைந்துள்ள பொக்ஸ் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

Beaches & Islands

இந்த சந்திப்பில் தமிழ்த் தேசிய பேரவை சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளருமாகிய செல்வராசா கஜேந்திரன், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் வடக்கு மாகாண சபை அமைச்சருமான பொ.ஜங்கரநேசன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை பரப்புச் செயலாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான நடராஜர் காண்டீபன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

By admin