• Tue. Jun 3rd, 2025

24×7 Live News

Apdin News

ஒடிசா: திருமண பரிசு பார்சலில் வந்த வெடிகுண்டு – மணமகனை கொன்ற ஆசிரியர் சிக்கியது எப்படி?

Byadmin

May 31, 2025


சௌமிய சேகர் சாஹு & மனைவி ரீமா.
படக்குறிப்பு, திருமணத்தில் சௌமி சேகர் சாஹு மற்றும் அவரது மனைவி ரீமா

  • எழுதியவர், சந்தீப் சாஹு & சௌதிக் பிஸ்வாஸ்
  • பதவி, பிபிசி

பட்னாகர் பார்சல் வெடிகுண்டு வழக்கு மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட, முக்கியமான வழக்கு. 2018இல் ஒடிசாவை அதிரவைத்த இந்தக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட புஞ்சிலால் மெஹெர் என்ற குற்றவாளிக்கு 2025 மே 28 புதன்கிழமை உள்ளூர் நீதிமன்றம் இரண்டு ஆயுள் தண்டனைகள், தலா பத்து ஆண்டுகள் வீதம் இரண்டு தண்டனைகள் மற்றும் ஏழு ஆண்டுகள் வீதம் ஒரு தண்டனை ஆகியவற்றோடு ரொக்க அபராதத்தையும் விதித்துள்ளது.

ஒடிசாவின் பலங்கிர் மாவட்டம் பட்னாகர் நகரில் பிப்ரவரி 23, 2018 அன்று நடந்த குண்டுவெடிப்பில் மென்பொருள் பொறியாளர் சௌமிய சேகர் சாஹு (26), அவரது பாட்டி ஜெமாமணி மெஹெர் ஆகியோர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் மணப்பெண் ரீமா படுகாயமடைந்தார்.

திருமணமான சில நாட்களுக்குப் பிறகு மணமகன் சௌமிய சேகரின் வீட்டிற்கு கொரியரில் பரிசு ஒன்று வந்து சேர்ந்தது. சௌமிய சேகர் மற்றும் ரீமாவின் திருமணம் நடந்து ஐந்து நாட்களே ஆகியிருந்த நிலையில், அனைவரும் வீட்டில் கூடியிருந்தனர்.

திருமணப் பரிசாக வந்த பரிசுப் பொட்டலத்தை புதுமணத் தம்பதிகள் திறந்தபோது, அது வெடித்தது. இந்த வழக்கு ‘திருமண வெடிகுண்டு’ வழக்கு என்று பிரபலமாகப் பேசப்பட்டது.

By admin