• Fri. Oct 3rd, 2025

24×7 Live News

Apdin News

ஒருவரது உடலில் தவறுதலாக வேறு வகை ரத்தம் ஏற்றப்பட்டால் என்ன நடக்கும்? தெலுங்கானா பெண் என்ன ஆனார்?

Byadmin

Oct 1, 2025


ஒருவருக்கு வேறு வகை ரத்தம் செலுத்தப்பட்டால் என்ன ஆகும்?

பட மூலாதாரம், Getty Images

சாலை விபத்துகளில் காயமடைந்தவர்களுக்கும், அறுவை சிகிச்சை செய்யும்போதும் அல்லது ரத்தம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ரத்தம் தேவைப்படுகிறது. அத்தகைய சூழ்நிலைகளில், ரத்த வங்கிகளில் இருந்தோ அல்லது அதே ரத்தக் வகையை கொண்ட நன்கொடையாளர்களிடம் இருந்தோ ரத்தம் பெறப்பட்டு நோயாளிகளுக்கு ஏற்றப்படுகிறது.

சமீபத்தில் வாரங்கல் எம்ஜிஎம் மருத்துவமனையில், 34 வயதான ஒரு பெண் சேர்க்கப்பட்டபோது அங்கிருந்த மருத்துவ ஊழியர்கள் அவருக்கு ‘ஓ’ பாசிட்டிவ் ரத்தத்திற்குப் பதிலாக ‘பி’ பாசிட்டிவ் ரத்தத்தை ஏற்றியுள்ளனர்.

ஒரு நாள் கழித்து, நோயாளிக்கு வேறு வகை ரத்தம் செலுத்தப்பட்டதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். அதற்குள்ளாக நோயாளிக்கு வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற உடல்நலப் பிரச்னைகள் ஆரம்பமாகிவிட்டன. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக வாரங்கல் எம்ஜிஎம் கண்காணிப்பாளர் டாக்டர் கிஷோர் குமார் உறுதிப்படுத்தியுள்ளார்.

உயிர்களைக் காப்பாற்றும் அதே ரத்தம் தவறுதலாக அமைந்துவிட்டால் அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இந்த வாரங்கல் சம்பவம் ஒரு உதாரணம்.

By admin