• Mon. Jun 9th, 2025

24×7 Live News

Apdin News

ஒவ்வொரு 7 நிமிடத்திற்கும் ஒரு தாய் மரணம் – பிரசவத்திற்கு உலகிலேயே மிக மோசமான நாடு!

Byadmin

Jun 8, 2025


மகப்பேறு மருத்துவம், ஆரோக்கியம், பெண்களின் ஆரோக்கியம்,

பட மூலாதாரம், Getty Images

நைஜீரியாவில் சராசரியாக ஒவ்வொரு ஏழு நிமிடங்களுக்கும் ஒரு பெண் பிரசவத்தின் போது உயிரிழக்கிறார். தனது 24 வது வயதில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நஃபிசா சலாஹுவும் இந்த புள்ளிவிவரத்தில் இடம் பெற்றிருப்பார்.

அவர் அப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். துரதிர்ஷ்டவசமாக மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கியிருந்த காலகட்டம் அது. மருத்துவமனையில் இருந்த போதும் கூட, சிக்கலான சூழல் எழும் போது எந்த நிபுணர்களின் உதவியும் சரியான நேரத்திற்கு அவருக்கு கிடைக்கவில்லை.

பிரசவத்தின் போது அவருடைய குழந்தையின் தலை சிக்கிக் கொண்டது. பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்த அவரை அப்படியே படுத்திருக்கும்படி கூறியிருக்கின்றனர் அங்கிருந்த மருத்துவப் பணியாளர்கள். அவரின் பிரசவ வலியானது மூன்று நாட்களுக்கு நீடித்தது.

இறுதியில் அறுவை சிகிச்சை மூலமாக குழந்தையை வெளியே எடுக்க முடிவெடுக்கப்பட்டது. மருத்துவரை தேடி கண்டுபிடித்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.

By admin