• Fri. May 16th, 2025

24×7 Live News

Apdin News

ஓமந்தையில் விசேட அதிரடிப் படையின் வாகனம் மோதி ஒருவர் மரணம்!

Byadmin

May 16, 2025


வவுனியா, ஓமந்தைப் பகுதியில் விசேட அதிரடிப் படையின் வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்தில் 32 வயதுடைய கண்ணதாசன் திவியன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

வீதியின் மறு திசைக்கு மாற முற்பட்ட மோட்டார் சைக்கிள மீது விசேட அதிரடிப் படையின் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதோடு வீதியின் அருகே நின்ற நபருடனும் விசேட அதிரடிப் படையின் வாகனம் மோதுண்டது.

இந்த விபத்தில் சிக்கிய விசேட அதிரடிப் படையின் வாகனம் விபத்து இடம்பெற்ற பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிளின் சாரதி மற்றும் வீதியின் அருகே நின்றவர் ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் மோட்டார் சைக்கிளின் சாரதி சிகிச்சை பலனிற்றி உயிரிழந்துள்ளார்.

இன்று இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

By admin