• Wed. Sep 9th, 2026

24×7 Live News

Apdin News

ஓமனில் ஐந்து மாதங்களாக கரையைப் பார்க்காமல் படகிலேயே வாழ்ந்த தமிழ்நாடு மீனவர்கள் – நடந்தது என்ன?

Byadmin

Sep 9, 2026


ஓமனில் தவிக்கும் தமிழக மீனவர்கள்
படக்குறிப்பு, ஓமனில் தவிக்கும் தமிழக மீனவர்கள்

    • எழுதியவர், யாழ் இனியன்
    • பதவி, மூத்த செய்தியாளர், பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள், கன்னியாகுமரியைச் சேர்ந்த நான்கு பேர், ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவர், ஓமனில் வேலைக்குச் சென்று விசா காலாவதியானதால் ஐந்து மாதங்களுக்கும் மேலாக கரைக்கு வராமல் படகிலேயே வாழ்ந்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் ஓமன் சென்ற இவர்களுக்கு மாதம் ஒரு லட்சம் ரூபாய் ஊதியம் வழங்கப்படுமென உறுதியளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், வேலைக்கான விசா கிடைக்காத நிலையில், சுற்றுலா விசாவும் காலாவதியானதால் அவர்கள் சட்டவிரோதமாகத் தங்கியவர்களாக மாறினர்.

இப்போது இந்திய தூதரகத்தின் உதவியுடன் அவர்கள் மீட்கப்பட்டு, ஓமனில் உள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், விசா காலாவதியானதற்கான அபராதம் செலுத்த வேண்டியிருப்பதால் அவர்களால் உடனடியாக இந்தியா திரும்ப முடியாத நிலை உள்ளது.

ஓமன் அழைத்துச் சென்ற முகவர்

சிரில் ராபின் ஜார்ஜ், அந்தோணி பிச்சையா அலெக்ஸ் ரவி, அந்தோணி பிச்சை சாரோன் ஜோசவா, தாமஸ் அருள், மாரியப்பன் ஜெட்லி ஆகிய ஐந்து மீனவர்களையும் கன்னியாகுமரியைச் சேர்ந்த பெத்தாலிஸ் என்ற முகவர் அணுகியுள்ளார்.

ஓமனில் ஒருவரிடம் வேலை இருப்பதாகக் கூறிய அவர், விசா மற்றும் விமானப் பயணத்திற்காக அவர்கள் எந்தப் பணமும் செலுத்தத் தேவையில்லை என்றும், மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.

By admin