1
ஓமான் கடற்கரைக்கு அருகே ஏற்பட்ட படகு விபத்தில் பிரான்ஸ் சுற்றுலாப் பயணிகள் மூவர் உயிரிழந்ததாக ஓமான் பொலிஸார் தெரிவித்துள்ளது.
25 பேரை ஏற்றிச் சென்ற அந்த படகு, பிரான்ஸ் சுற்றுலாப் பயணிகள் குழு, சுற்றுலா வழிகாட்டி மற்றும் கப்டன் உட்பட கற்பகக் கடலில் உள்ள Sultan Qaboos Port-இல் இருந்து சுமார் 2.5 கடல் மைல் தூரத்தில் சென்றபோது கவிழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் மூவர் உயிரிழந்த நிலையில், மேலும் இரண்டு சுற்றுலாப் பயணிகள் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டனர். சம்பவம் குறித்து பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சகம் உடனடியாக எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. இந்த தகவலை Reuters வெளியிட்டுள்ளது.