• Fri. Feb 27th, 2026

24×7 Live News

Apdin News

ஓ.பன்னீர்செல்வம் விஜய், சசிகலாவை விடுத்து திமுகவில் சேர்ந்ததன் அரசியல் கணக்கு என்ன?

Byadmin

Feb 27, 2026


தி.மு.கவில் இணைந்த ஓ. பன்னீர்செல்வம்

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

அ.தி.மு.கவில் இருந்து மூன்று முறை முதலமைச்சராக பதவி வகித்த ஓ. பன்னீர்செல்வம் தற்போது தி.மு.கவில் இணைந்திருக்கிறார். தமிழ்நாட்டு அரசியலில் இதுவரை நடக்காத இந்த நிகழ்வு யாருக்கு சாதகம்?

2002-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி நன்பகல். ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்து, அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் ஜெ. ஜெயலலிதா சுமார் 41,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்த தருணம்.

அடுத்த சில நிமிடங்களில் தனது போயஸ் தோட்ட இல்லத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ஜெயலலிதா. அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஜெயலலிதா, “சகோதரர் பன்னீர்செல்வத்தை தொண்டராகப் பெற்றது நான் செய்த பாக்கியம்” என்றார்.

இப்போது சுமார் ஒரு கால் நூற்றாண்டு கழிந்திருக்கும் நிலையில், அ.தி.மு.கவின் நேரெதிர் கட்சியான தி.மு.கவின் தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், “திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவரின் பெயரைத் தாங்கிய அவர் திராவிட இயக்கக் கொள்கை காக்கும் நம் பேரியக்கத்தில் இணைந்துள்ளார். நம்மோடு இணைந்துள்ள சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர்” என்று கூறி ஓ. பன்னீர்செல்வத்தைப் பாராட்டியிருக்கிறார்.

ஓ.பன்னீர்செல்வம்

பட மூலாதாரம், Facebook/Officeofops

படக்குறிப்பு, ”தென்மாவட்டங்களில் எடப்பாடி கே. பழனிசாமிக்கு பின்னடைவை ஏற்படுத்த வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் நினைக்கிறார்”

மூன்று முறை முதல்வர்

கடந்த சென்ற சுமார் கால் நூற்றாண்டில் தமிழக அரசியலில் எவ்வளவோ நடந்துவிட்டது. ஓ. பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்விலும் பல ஏற்றத்தாழ்வுகள்.

By admin