• Sun. Mar 16th, 2025

24×7 Live News

Apdin News

ஔரங்கசீப் கல்லறையை இடிக்க திட்டமா? அதைச் சார்ந்துள்ள குல்டாபாத் மக்கள் கூறுவது என்ன?

Byadmin

Mar 16, 2025


குல்டாபாத்தில் தொழில் செய்யும் ஷேக் இக்பால்

பட மூலாதாரம், Kiran Sakale

படக்குறிப்பு, ஷேக் இக்பால்

“இந்தியாவில் சிலர் வெறுப்பை விதைக்கின்றனர். இவர்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவு. ஆனால் அவர்கள் தினமும் தீயைப் பற்ற வைக்கப் பணியாற்றி வருகின்றனர்.”

இதுதான் குல்டாபாத்தில் தொழில் செய்யும் ஷேக் இக்பால் கூறியது. குல்டாபாத் நகர், சத்ரபதி சம்பாஜி நகரில் இருந்து (முன்னதாக ஒளரங்காபாத்) 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

ஒளரங்கசீப்பின் கல்லறை இந்த நகரில் அமைந்துள்ளது. ஒளரங்கசீப்பின் கல்லறையை இடிக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுப்பெற்று வருகிறது. ஷேக் இக்பால் அந்தப் பகுதியில் பூக்கள் மற்றும் பூஜை பொருட்கள் கடை வைத்திருக்கிறார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மார்ச் 13ஆம் தேதி, ஒளரங்கசீப்பின் கல்லறை அமைந்திருந்த பகுதியை நாங்கள் அடைந்தபோது, அங்கு ஏராளமான காவல்துறையினர் இருந்தனர்.

By admin