• Fri. Mar 21st, 2025

24×7 Live News

Apdin News

ஔரங்கசீப் சர்ச்சையிலிருந்து விலகி இருக்கும் ஆர்எஸ்எஸ்: இன்றைய காலத்துக்கு பொருத்தமானவர் அல்ல என கருத்து

Byadmin

Mar 20, 2025


ஔரங்கசீப், ஆர்எஸ்எஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முகலாய மன்னர் ஔரங்கசீப்

மகாராஷ்டிராவில் முகலாய பேரரசர் ஔரங்கசீப் பற்றிய சர்ச்சை மற்றும் நாக்பூரில் உள்ள அவரது கல்லறை தொடர்பாக வன்முறை சம்பவங்கள் நடைபெற்ற நிலையில், ஔரங்கசீப் ‘இன்றைய காலகட்டத்திற்கு பொருத்தமானவர் அல்ல’ என்று ஆர்எஸ்எஸ் கூறியுள்ளது.

பெங்களூருவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஔரங்கசீப் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேத்கர், “எந்த வகையான வன்முறையும் இந்த சமூகத்திற்கு நல்லதல்ல. இன்றைய காலகட்டத்திற்கு அவர் பொருத்தமானவர் இல்லை என்று நான் நினைக்கிறேன்”, என்றார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ்-ன் அகில இந்திய பிரதிநிதிகள் சபையின் மூன்று நாள் மாநாட்டிற்கு முன்னதாக நடந்த செய்தியாளர் சந்திப்பில், ”நாக்பூரில் நடந்த வன்முறைக்கான காரணங்களை காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது” என சுனில் அம்பேத்கர் கூறினார்.

மகாராஷ்டிராவின் சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்றக் கோரி விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளம் உள்ளிட்ட சில இந்து மத அமைப்புகள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து பரவிய வதந்தியால் நாக்பூரில் உள்ள மஹால் பகுதியில் வன்முறை ஏற்பட்டது. இதில் காவல்துறையினர் உட்பட பலர் காயமடைந்தனர்.

By admin