• Thu. Mar 20th, 2025

24×7 Live News

Apdin News

ஔரங்கசீப்: தந்தைக்கு சிறை, சகோதரர்களுக்கு மரண தண்டனை – அவரின் ஆட்சி எப்படி இருந்தது?

Byadmin

Mar 20, 2025


ஔரங்கசீப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஔரங்கசீப் ஆட்சிக்குப் பிறகு முகலாய சாம்ராஜ்யம் மெல்ல மெல்ல தன் வலிமையை இழக்க ஆரம்பித்தது

முகலாயப் பேரரசை சுமார் அரை நூற்றாண்டு காலம் ஆட்சி செய்த பேரரசர் ஔரங்கசீப், வரலாற்றில் ஒரு சர்ச்சைக்குரிய நபராகவே குறிப்பிடப்படுகிறார். அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் என்ன?

முகலாய சாம்ராஜ்யத்தின் வலிமையான கடைசி அரசராக கருதப்படும் ஔரங்கசீப், 1658லிருந்து 1707ஆம் ஆண்டுவரை, சுமார் அரை நூற்றாண்டு காலம் இந்தியாவின் ‘சக்கரவர்த்தியாக’ ஆட்சி செய்தவர். அவருக்குப் பிறகு முகலாய சாம்ராஜ்யம் மெல்ல மெல்ல தன் வலிமையை இழக்க ஆரம்பித்தது.

ஆனால், ஔரங்கசீபின் காலகட்டத்தில் உலகின் மிக முக்கியமான பேரரசுகளில் ஒன்றாக இந்துஸ்தான் இருந்தது. தனது நீண்ட ஆட்சிக் காலத்தில் ஔரங்கசீப் மேற்கொண்ட பல நடவடிக்கைகள், அவரை சர்ச்சைக்குரிய மனிதராக காட்சியளிக்க வைக்கின்றன. உண்மையில் ஔரங்கசீபின் ஆட்சிக் காலத்தில் என்ன நடந்தது?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இளம் வயதிலேயே அரியணை போட்டி

1618ஆம் ஆண்டு நவம்பர் மூன்றாம் தேதி குஜராத்தில் இருக்கும் தோஹத்தில் முகலாய இளவரசன் குர்ரத்துக்கும் (பிற்காலத்தில் ஷாஜஹான்) அவருடைய மனைவி மும்தாஜுக்கும் பிறந்தார். அப்போது ஷாஜஹான் ஆட்சிக்கு வரவில்லை. ஜஹாங்கீரின் ஆட்சியே நடந்துகொண்டிருந்தது.

By admin