• Tue. Jun 24th, 2025

24×7 Live News

Apdin News

கட்டாரில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

Byadmin

Jun 23, 2025


ஈரானின் முக்கியமான அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக, மத்திய கிழக்கின் அமைந்துள்ள மிகப்பெரிய அமெரிக்க இராணுவ தளமான கட்டாரில் உள்ள ஒரு அமெரிக்க தளத்தின் மீது ஈரான், இன்று திங்கட்கிழமை இராணுவத் தாக்குதலை நடத்தியது.

இதனையடுத்து, தனது வான் பாதுகாப்பு கட்டமைப்பானது ஈரானின் ஏவுகணைகளை இடைமறித்ததாகவும், ஈரானிய தாக்குதலை கண்டித்ததாகவும் கட்டார் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் ஈரானுடனான மோதல் தீவிரமடையக்கூடும் என்ற அச்சத்தைத் தூண்டியுள்ளதுடன், அல் உதெய்த் என்ற இந்த தளம், அமெரிக்க மத்திய கட்டளையின் முக்கிய தலைமையகமாக செயல்படுகிறது.

வார இறுதியில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு ஈரானிய பழிவாங்கலுக்கான முக்கிய சாத்தியமான இலக்காக இந்த தளம் கருதப்படுகின்றது.

உயிரிழப்புகளைக் குறைப்பதற்கான ஒரு வழியாக, தாக்குதல்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கட்டார் அதிகாரிகளுக்கு ஈரான் முன்கூட்டியே அறிவித்ததாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, அமெரிக்காவும் இங்கிலாந்தும் கட்டாரில் தாக்குதலுக்குத் தயாராகி, அங்குள்ள தங்கள் குடிமக்களை பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு எச்சரித்தன.

கட்டார் பின்னர் அதன் வான்வெளியை மூடிவிட்டதாக அறிவித்தது, தாக்குதலுக்குப் பிறகு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வான்வெளியை மூடியது.

வான்வெளி மூடல்கள் காரணமாக சர்வதேச விமானப் பயணத்தின் இரண்டு முக்கிய மையங்களான தோஹா மற்றும் டுபாயிலிருந்து விமான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

By admin