• Tue. Nov 11th, 2025

24×7 Live News

Apdin News

கணவரை சமையல் அறையில் புதைத்த பெண் – ஓர் ஆண்டுக்கு பின் அவிழ்ந்த மர்மம்

Byadmin

Nov 11, 2025


 ரூபி

பட மூலாதாரம், Bhargav Parikh/ Getty Images

படக்குறிப்பு, ரூபி

“என் கணவரைப் பற்றி யாராவது கேட்டால், அவர் துபைக்கு வேலைக்குப் போயிருக்கிறார் என்று சொல்வேன். ஆனால் உண்மையில், நான் அவரைக் கொன்று சமையலறையில் புதைத்து விட்டேன். இரண்டு மாதங்கள் அங்கேயே சமைத்து, என் குழந்தைகளுக்கு உணவளித்தேன். பிறகு, என் காதலனுடன் வேறு இடத்தில் வாழச் சென்றேன்.”

ஆமதாபாத் குற்றப்பிரிவு அலுவலகத்தில் ரூபி என்ற பெண் இவ்வாறு போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தபோது, போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

ரூபி, தனது காதலனுடன் சேர்ந்து தனது கணவரை கொன்று, அவரது உடலை சமையலறையில் குழி தோண்டி புதைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆதாரங்களை மறைக்க அந்த குழியில் உப்பு போடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் சமையலறையின் தரையில் ஓடுகள் பதித்து, அதனை பழைய நிலைக்கு மாற்றி அமைத்துள்ளனர்.

ஒரு வருடத்திற்கும் மேலாக இதைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை. ஆனால் இறுதியில் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்த மர்மம் வெளிப்பட்டுள்ளது. விசாரணையில், முகமது இஸ்ரேல் அக்பரலி அன்சாரி எனப்படும் சமீர் பிஹாரி என்ற நபரின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

By admin