• Sat. Sep 6th, 2025

24×7 Live News

Apdin News

கண்ணில் வளர்ந்த பல்; பிகார் நபருக்கு நேர்ந்த விநோத பிரச்னை

Byadmin

Sep 5, 2025


நோயாளி முதுகை காட்டிக்கொண்டு அமர்ந்திருக்கும் புகைப்படம்

பட மூலாதாரம், SHAHNAWAZ AHMAD/BBC

படக்குறிப்பு, நோயாளி ரமேஷ் குமார் (மாற்றப்பட்ட பெயர்) தாம் இப்போது நலமாக இருப்பதாக பிபிசியிடம் கூறினார்.

சமீபத்தில் பாட்னா இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் நிறுவனம் (ஐஜிஐஎம்எஸ்) மருத்துவமனை ஒரு அபூர்வ நிகழ்வை எதிர்கொண்டது.

இங்கு ஒரு நோயாளியின் வலது கண்ணில் பல் வளர்ந்துகொண்டிருந்தது. இந்த நோயாளியின் அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர்கள், இதை மருத்துவ அறிவியலில் அபூர்வமான சில சம்பவங்களில் ஒன்றாக கருதுகின்றனர்.

ஆகஸ்ட் 11 அன்று நோயாளியின் கண்ணில் இருந்து பல் அகற்றப்பட்டு, இப்போது அவர் நலமாக உள்ளார். பிபிசி இந்த நோயாளியையும் அவரது அறுவை சிகிச்சையில் ஈடுபட்ட மருத்துவர்களையும் பேட்டி எடுத்து இந்த விஷயத்தை புரிந்து கொள்ள முயற்சித்தது.

இந்த செய்தியில், ஐஜிஐஎம்எஸ்ஸின் தனியுரிமை கொள்கையை மதித்து, நோயாளியின் அடையாளத்தை மறைத்து அவரது பெயர் மாற்றப்பட்டுள்ளது.

By admin