• Wed. Jun 25th, 2025

24×7 Live News

Apdin News

கத்தாரில் அமெரிக்க ராணுவ தளம் தாக்குதல் : தமிழர்களின் நிலை என்ன?

Byadmin

Jun 25, 2025


மத்திய கிழக்கில் உள்ள தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள்?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சாரதா வி
    • பதவி, பிபிசி தமிழ்

கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளமான அல்-உடெய்ட்டை இரான் திங்கள்கிழமை இரவு தாக்கியது. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் பெரிய ராணுவ தளம் இதுவே. இதையடுத்து, மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் சற்று பதற்றம் நிலவியது.

இந்த தாக்குதலுக்கு முன்பாக கத்தார் தனது விமான சேவைகளை நிறுத்தியிருந்தது. இந்த தாக்குதல் காரணமாக, பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட நாடுகளும் தங்கள் விமான சேவைகளை நிறுத்தியிருந்தன. இரான் நடத்திய தாக்குதலில் யாரும் உயிரிழக்கவில்லை என்று அமெரிக்கா உறுதி செய்துள்ளது.

தற்போது கத்தார் மற்றும் பிற நாடுகளின் விமான சேவைகளும் மீண்டும் இயங்கி வருகின்றன. எனினும், கத்தாரில் நடத்தப்பட்ட தாக்குதல் அப்பகுதி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழல் குறித்து மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள்?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கத்தார்

கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் வசிக்கும் வைஷ்ணவி திங்கள்கிழமை இரவு குண்டுவீச்சுகளை தனது வீட்டின் ஜன்னலில் வழியே பார்க்க முடிந்தது என்றார். குண்டுகளின் சத்தமும், அதன் அதிர்வுகளையும் கூட உணர முடிந்தது என்றார். “மாலை 7.30 மணி இருக்கும். திடீரென ஜன்னல்கள் ஆடுவதை கவனித்தோம். ஜன்னல் அருகே சென்ற எனது கணவர் ‘போர் போர்’ என்று கத்தினார். விண்ணில் வெளிச்சத்துடன் கூடிய குண்டுகள் வீசப்படுவதை காண முடிந்தது. சிறிது நேரம் ஒரு திசையிலிருந்து அவை வந்துக் கொண்டிருந்தன, அதன் பிறகு எதிர் திசையிலிருந்து வந்தன. அவ்வபோது ஏதோ வெடித்தது போன்ற சத்தமும், அதே நேரத்தில் அதிர்வுகளையும் வீட்டில் உணர முடிந்தது. சுமார் 45 நிமிடங்கள் விண்ணில் இதை பார்க்க முடிந்தது” என்றார்.

By admin