66 பேர் காயம்:
“கத்தார் அதிகாரிகளுக்கும், இந்திய சமூக அமைப்புகளுக்கும் அவர்களின் ஆதரவிற்கும் ஒருங்கிணைப்பிற்கும் நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், இந்த விபத்தில் காயமடைந்த இந்தியர்களுடன் தூதரகம் தொடர்பில் இருந்து வருகிறது,” என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கத்தார் எனர்ஜி எல்.என்.ஜி. நிறுவனத்தால் இயக்கப்படும், ராஸ் லஃபான் தொழிற்பேட்டையில் உள்ள பர்சான் உள்ளூர் எரிவாயு விநியோக நிலையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில், இந்தியர்கள் உட்பட 66 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் கத்தார், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், கென்யா, கானா, தான்சானியா, நைஜீரியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.