• Mon. Nov 24th, 2025

24×7 Live News

Apdin News

கனடா சென்ற பிறகு பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் ஏன் ‘காணாமல் போகிறார்கள்’?

Byadmin

Nov 24, 2025


பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம்

பட மூலாதாரம், Mike Campbell/NurPhoto via Getty Images

படக்குறிப்பு, கனடாவின் பியர்சன் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம்

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (PIA) அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறது. சில நேரங்களில் பைலட்டுகளின் கல்வித் தகுதி பற்றியும், சில நேரங்களில் நிறுவனத்தை தனியார்மயமாக்க வேண்டுமென்ற கோரிக்கைகள் பற்றியும் விமர்சனங்கள் எழுகின்றன.

இதற்கிடையில், பி.ஐ.ஏ ஊழியர்கள் கனடாவில் “காணாமல் போவதாக” தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வார சனிக்கிழமை, கனடாவின் டொரான்டோவில் இருந்து லாகூருக்குச் செல்லவேண்டிய பிகே 798 விமானத்தில் பணிப்பெண்ணாக பணிபுரிந்த ஆசிப் நஜாம், சரியான நேரத்திற்கு விமான நிலையத்திற்கு வரவில்லை என்பதை பி.ஐ.ஏ செய்தித் தொடர்பாளர் அப்துல்லா கான் உறுதிப்படுத்தினார்.

அவரைத் தொடர்பு கொண்டபோது, தனக்கு ‘உடல்நலக்குறைவு’ ஏற்பட்டதால் வர முடியவில்லை என்று அவர் கூறியதாக பி.ஐ.ஏ தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. சட்டவிரோதமாக “காணாமல் போனது” தொடர்பாக (illegal disappearance) அந்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பி.ஐ.ஏ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

By admin