• Mon. Oct 27th, 2025

24×7 Live News

Apdin News

கனிமவள கொள்ளை தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்  | CBI should investigate mineral theft: Anbumani

Byadmin

Oct 26, 2025


கோவை: க​னிமவளக் கொள்ளை தொடர்​பாக சிபிஐ விசா​ரிக்க வேண்​டும் என்று பாமக தலை​வர் அன்​புமணி கூறி​னார்.

கோவை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: கனமழை​யால் டெல்டா மாவட்​டங்​களில் அறு​வடை​யான நெல் முளைக்​கத் தொடங்​கி​யுள்​ளது. அதே​போல, சம்பா பயிர்​கள் மழை​யில் மூழ்கி நாச​மாகி விட்​டன. 6.5 லட்​சம் ஏக்​கர்குறுவை சாகுபடி நடை​பெற்ற நிலை​யில், 18 லட்​சம் டன் நெல் கொள்​முதல் செய்​திருக்க வேண்​டும். ஆனால், 5.5 லட்​சம் டன் மட்​டுமே கொள்​முதல் செய்துள்ளனர். நெல் ஈரப்​ப​தம் அதி​க​மான​தால் வாங்க மறுக்​கின்​றனர். விவ​சா​யிகள் மீது அக்​கறை இல்​லாத திமுக அரசுக்கு மக்​கள் பாடம் புகட்​டு​வார்​கள்.

தென் மாவட்​டத்​தில் இருந்து அதிக அளவில் கனிம வளங்​கள் கடத்​தப்​படு​கின்​றன. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்​கவில்​லை. இந்த விவ​காரத்தை சிபிஐ விசா​ரிக்க வேண்​டும். இது தொடர்​பாக நீதி​மன்​றதை நாடு​வோம். நீதி​மன்​றம் அனு​மதி அளித்​தும் தமிழகத்​தில் சாதி​வாரி கணக்​கெடுப்பு நடத்​தப்​பட​வில்​லை. அத்​திக்​கட​வு-அ​வி​நாசி திட்​டத்​தில் 20 சதவீத ஏரி​கள் மட்​டுமே பயனடைந்​துள்​ளன. இந்த திட்​டத்தை மறுஆய்வு செய்ய வேண்​டும்.

திமுக அரசுக்கு நீர்​மேலாண்மை குறித்து எது​வும் தெரிய​வில்லை. தமிழக அரசு கொண்டு வந்​துள்ள தனி​யார் பல்​கலை. திருத்த சட்​டம் தவறானது. இதை திரும்​பப் பெற வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார். தொடர்ந்​து, ராம​தாஸ் குறித்து செய்​தி​யாளர்​கள் சில கேள்வி​கள் எழுப்​பிய​போது “அது எங்​கள் உட்​கட்சி விவ​காரம்” என்று அன்​புமணி பதில் அளித்​தார்.



By admin