• Wed. Jan 7th, 2026

24×7 Live News

Apdin News

கபில்தேவ் இந்திய கிரிக்கெட்டின் முகத்தை மாற்றியமைத்தது எப்படி?

Byadmin

Jan 5, 2026


இந்திய கிரிக்கெட்டில் பெரும் தாக்கம் ஏற்படுத்திய கபில் தேவின் நான்கு முகங்கள்

பட மூலாதாரம், Getty Images

ஜூன் 25, 1983: கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி. முதலிரு உலகக் கோப்பையையும் வென்றிருந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை அன்று இந்திய அணி எதிர்த்தது விளையாடியது அந்த இரு உலகக் கோப்பைகளிலும் சேர்த்து ஒரேயொரு போட்டியில் மட்டுமே வென்றிருந்தது இந்தியா.

அதனால் தான் அன்று வெஸ்ட் இண்டீஸ் ஜெயிக்கும் என்றே பெரும்பாலானவர்கள் கருதினார்கள். “நாங்கள் லார்ட்ஸ் மைதானத்துக்குள் நுழைந்தபோது, இந்தியா வெற்றி பெற 50/1 (அதாவது ஒரு ரூபாய்க்கு 50 ரூபாய்), 100/1 என்ற வாய்ப்புகள் வரை புக்கிக்கள் வழங்கினார்கள்” என்று கூறினார் ‘தி நைன் வேவ்ஸ் – தி எக்ஸ்டிரார்டினரின் ஸ்டோடி ஆஃப் இந்தியன் கிரிக்கெட்’ புத்தகத்தை எழுதிய மிஹிர் போஸ்.

அந்த அளவுக்குக் குறைத்து மதிப்பிடப்பட்டிருந்த இந்திய அணி, எதிர்பாராததை அரங்கேற்றி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணியை அவ்வாறு முன்னின்று வழிநடத்தி சாம்பியனாக்கியிருந்தார் கபில் தேவ்.

“நாங்கள் உலகக் கோப்பையை வெல்வோம் என்று ஒருவர் நம்பியிருந்தாரெனில் அது ஒரேயொருவர் மட்டும்தான் – கபில் தேவ்” என்று 83 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது கூறியிருந்தார் அந்த உலகக் கோப்பை வென்றிருந்த இந்திய அணியில் இடம்பெற்றிருந்த கே.ஶ்ரீகாந்த்.

ஶ்ரீகாந்த், கவாஸ்கர் உள்பட பல வீரர்களும் கபில்தேவ் அந்த அணியில் ஏற்படுத்திய தாக்கம் எந்த அளவுக்கு அணியின் நம்பிக்கையை உயர்த்தியது என்று சொல்லியிருக்கிறார்கள்.

By admin