• Mon. Jun 9th, 2025

24×7 Live News

Apdin News

கரப்பான்‌ பூச்சிகள் தலையை வெட்டிய பிறகும் உயிருடன் இருப்பது எப்படி?

Byadmin

Jun 9, 2025


இரண்டு கரப்பான்களை உணவு, தண்ணீரின்றி அடைத்து வைத்து, அவற்றின் செயல்பாடுகள் அவதானிக்கப்பட்டன.

பட மூலாதாரம், Subagunam Kannan/BBC

படக்குறிப்பு, இரண்டு கரப்பான்களை உணவு, தண்ணீரின்றி அடைத்து வைத்து, அவற்றின் செயல்பாடுகள் அவதானிக்கப்பட்டன.

  • எழுதியவர், க. சுபகுணம்
  • பதவி, பிபிசி தமிழ்

கரப்பான் பூச்சி.

இந்த வார்த்தையை கேட்டதுமே சிலர் பதறியடித்துக் கொண்டு துள்ளுவதைப் பார்த்திருப்போம். ஆனால், இந்தக் கரப்பான்களின் வாழ்க்கைச் சுழற்சியில் சுவாரஸ்யங்களுக்குப் பஞ்சமில்லை.

கரப்பான் பூச்சிகளின் ‘தலையை வெட்டினாலும் சில நாட்களுக்கு அவை உயிருடன் இருக்கும்’ என்று சொல்லப்படும் ஒரு தகவல் பற்றிய சந்தேகம் நீண்ட நாட்களாகவே இருந்தது.

குறிப்பாக, ஒரு கரப்பான் பூச்சியால் எத்தனை நாட்களுக்கு உணவு, தண்ணீரின்றி இருக்க இயலும் என்ற சந்தேகமும் எழுந்தது. ஏனெனில், ஒருவேளை தலையை வெட்டிய பிறகு காயம் ஆறிவிட்டாலும், மனிதர்களைப் போல அனைத்து உடல் இயக்கங்களையும் மூளை கட்டுப்படுத்தவில்லை என்றாலும், உயிர் வாழ உணவு, தண்ணீர் தேவை அல்லவா!

By admin