• Tue. Oct 21st, 2025

24×7 Live News

Apdin News

கருகிய கானகம் | கேசுதன்

Byadmin

Oct 21, 2025


 

ஓடிவந்த பாதையெல்லாம் நீரற்று கிடக்கிறது
மழை துளி கண்டிரா கானகம் அதில்
செங்குருதி ஈரம் படிந்ததுவோ

வீழ்ந்திட்ட சருகின் வழியே மறைந்திட்ட
கந்தக துகள்கள் அறிவாயா
ஊறிய நஞ்சித் துகள்கள் உறுஞ்சிய
வேர்கள் இவை தானா

நரிகள் வென்று விட்ட தேசம் தனில்
கருகி போன கானகங்கள் அங்கே
திமில் ஏறிய வஞ்சகன் பிறப்பித்த
கற்புக்கள் அறிந்திடுமா என்
தேசத்தின் தாகம்

வஞ்சகன் தொப்புக்குள் கொடி
விழமுன் நெஞ்சில்
நஞ்சிக்கொடி புனைந்த மறவர்
நாமல்லவா
கானகம் உயிர்ப்பித்த
வேங்கைகள் அல்லவா

கொடும் ஊரார் படைகொண்டு
உறவழித்த பாவியல்லவோ
கருக்கொண்ட வானிடை வழியே
வெட்டிச்செல்லும் மின்னலாய்
தணலிடை களம் கண்ட
கரு வேங்கைகள் மீதேறி
கரு நாகங்கள் கொத்தி பிளந்த
தலைகள் இன்று உயிர்கொண்டு
எழுந்திடுமா?

கேசுதன்

The post கருகிய கானகம் | கேசுதன் appeared first on Vanakkam London.

By admin