• Wed. Oct 8th, 2025

24×7 Live News

Apdin News

கரூரில் இறந்தவர்கள் குடும்பத்திடம் விஜய் 2 – 3 நிமிடங்கள் பேசியது என்ன?

Byadmin

Oct 8, 2025


வீடியோ காலில் பேசிய விஜய், கரூர் கூட்ட நெரிசல்

பட மூலாதாரம், TVK

படக்குறிப்பு, கரூர் சம்பவம் குறித்து விஜய் காணொளி ஒன்றை சில தினங்களுக்கு முன் வெளியிட்டிருந்தார்.

கரூரில் தவெக பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்து 10 நாட்களுக்கு மேலாகிவிட்ட நிலையில், உயிரிழந்தவர்கள் பலருடைய குடும்பத்தினரிடம் வீடியோ காலில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியுள்ளார்.

தங்களிடம் வீடியோ காலில் விஜய் பேசியபோது, இறந்தவர்களின் படங்களைப் பார்த்து கலங்கி கண்ணீர் விட்டதாகவும், ”உங்களுடைய குடும்பத்தில் ஒருவனாக நான் உங்களுடன் இருப்பேன். என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள்” என்று கூறியதாகவும் பலர், பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.

குழந்தையை இழந்தவர்களிடம் பேசும்போது, ”குழந்தைகளை கூட்டத்திற்கு அழைத்து வராதீர்கள் என்று நானே சொல்லியிருந்தேனே” என்றும் விஜய் சொன்னதாக சிலர் கூறினர்.

கரூரில் வேலுசாமிபுரம் என்ற பகுதியில், கடந்த செப்டெம்பர் 27 ஆம் தேதியன்று, தவெக தலைவர் விஜய் பரப்புரை செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர்.

By admin