• Sun. Oct 5th, 2025

24×7 Live News

Apdin News

கரூர்: அருணா ஜெகதீசனின் ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு அறிக்கையில் இடம்பெற்ற அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

Byadmin

Sep 29, 2025


அருணா ஜெகதீசன்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, அருணா ஜெகதீசன்

    • எழுதியவர், சாரதா வி
    • பதவி, பிபிசி தமிழ்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது.

அவர் ஞாயிற்றுக்கிழமை கரூரில் தனது விசாரணையை தொடங்கி தொடர்ந்து நடத்தி வருகிறார்.

அருணா ஜெகதீசன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர். அவர் 2015-ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார்.

2018-ஆம் ஆண்டு நடைபெற்ற தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்த நிலையில், அது குறித்து விசாரிக்க அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அப்போதிருந்த அதிமுக அரசு நியமித்தது. அந்த ஆணையத்தின் அறிக்கை 2022-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

By admin