• Sat. Oct 4th, 2025

24×7 Live News

Apdin News

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: கடந்த ஒரு வாரத்தில் நடந்தது என்ன?

Byadmin

Oct 4, 2025


கரூர் கூட்ட நெரிசல், தவெக, விஜய், வழக்கு விசாரணை, ஸ்டாலின்

பட மூலாதாரம், TVK

செப்டெம்பர் 27ம் தேதி கரூரில், த.வெ.க. தலைவர் விஜய் நடத்திய தேர்தல் பிரசாரத்தில் நெரிசல் மரணங்கள் ஏற்பட்டு இன்றுடன் ஒரு வாரம் ஆகிறது. இதில் 11 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கின் விசாரணையில் பல திருப்புமுனைகள் ஏற்பட்டுள்ளன. கடந்த ஒரு வார காலத்தில் நடந்தது என்ன?

செப்டம்பர் 27

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஒவ்வொரு வாரம் சனிக்கிழமையும் மாவட்ட வாரியாக பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அவ்வாறு கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி சனிக்கிழமை நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தில் பரப்புரை மேற்கொண்டார்.

நாமக்கல் மாவட்டத்தில் பரப்புரையை முடித்துவிட்டு இரவு கரூர் சென்றார். அப்போது பரப்புரை நடந்த வேலுசாமிபுரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

By admin