• Tue. Oct 15th, 2024

24×7 Live News

Apdin News

கர்நாடகா: கௌரி லங்கேஷ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மாலை மரியாதையா?

Byadmin

Oct 15, 2024


கெளரி லங்கேஷ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பத்திரிக்கையாளர் கெளரி லங்கேஷ் 2017ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்.

  • எழுதியவர், இம்ரான் குரேஷி
  • பதவி, பெங்களூரில் இருந்து, பிபிசி ஹிந்திக்காக

பத்திரிகையாளரும், செயற்பாட்டாளருமான கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்தனர். இதனை தொடர்ந்து, இருவருக்கும் கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள கோவிலில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் கலவையான எதிர்வினைகளை எழுப்பியுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட பரசுராம் வாகமோர் மற்றும் மனோகர் யாத்வே இருவரும் கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தில் கைது செய்யப்பட்டனர். தற்போது இவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மேலும் 6 பேருக்கும் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது.

2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி, கெளரி லங்கேஷ் பெங்களூருவில் அவரது வீட்டிற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார். அதன் பிறகு பெங்களூரு காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி – SIT) இந்த வழக்கை விசாரித்தது.

பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.ஐ) தலைவர் கோவிந்த் பன்சாரே, அறிஞர் எம்.எம். கல்புர்கி ஆகியோரது கொலைக்கும் கெளரி லங்கேஷ் கொலைக்கும் தொடர்பு இருப்பது எஸ்.ஐ.டி விசாரணையில் தெரியவந்தது.

By admin