• Sun. Oct 27th, 2024

24×7 Live News

Apdin News

கர்நாடகா: தலித் மீதான வன்முறை வழக்கில் 98 பேருக்கு ஆயுள் – நீதிபதி கூறியது என்ன?

Byadmin

Oct 26, 2024


கர்நாடகா, தலித், சாதி வன்முறை

பட மூலாதாரம், Getty Images

பத்தாண்டுகளுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் தலித் மக்களுக்கு எதிரான ஒரு வன்முறைச் சம்பவம் நடந்தது. அது அம்மாநிலத்தையே உலுக்கியது.

தற்போது இந்த வழக்கில் 98 பேருக்கு ஆயுள் தண்டனையும், 5 பேருக்கு சிறைத்தண்டனையும் விதித்து கர்நாடகாவில் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தனது 172-பக்க தீர்ப்பில், கொப்பல் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு சிறப்பு நீதிபதி சி.சந்திரசேகர், 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28-ஆம் தேதி, கங்காவதி ஊரகக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மருகும்பி கிராமத்தில் பட்டியல் பிரிவு மக்களுக்கு எதிராக நடந்தது, ‘சாதாரண கும்பல் வன்முறையை அல்ல, அது தலித் மக்களுக்கு எதிரான சாதி வன்முறை தான்’ என்று கூறினார்.

சம்பவம் நடந்த அன்று, மருகும்பி கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுநாத் என்பவர் திரைப்படம் பார்த்துவிட்டு வீடு திரும்பினார். ​​திரையரங்கில் டிக்கெட் வாங்கியதற்காகச் சிலர் தன்னை அடித்ததாக அங்கு வசிப்பவர்களிடம் கூறினார். இதையடுத்து, பட்டியல் சாதியினர் வசிக்கும் காலனி அருகே இருந்த கோவிலில், ஆதிக்கச் சாதி மக்கள் திரண்டனர்.

By admin