• Thu. Oct 17th, 2024

24×7 Live News

Apdin News

கர்நாடகா: மசூதிக்குள் ஜெய் ஸ்ரீராம் என கோஷமிடுவது தவறில்லையா? தீர்ப்பு சர்ச்சையாவது ஏன்?

Byadmin

Oct 17, 2024


கர்நாடகா, நீதிமன்றம், முஸ்லிம்கள்

பட மூலாதாரம், Getty Images

‘இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலமான மசூதியில் ராமரைப் போற்றி கோஷங்கள் எழுப்புவதில் தவறில்லை’ என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை பிரபல வழக்கறிஞர்கள் சிலர் விமர்சித்துள்ளனர்.

நீதிபதி எம்.நாகபிரசன்னா, “ஜெய் ஸ்ரீராம் என்று கோஷங்களை எழுப்பினால், அது பிற மதப் பிரிவினரின் மத உணர்வுகளைப் புண்படுத்துமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது,” என்றார்.

கர்நாடகாவில் உள்ள ‘தட்சிண கன்னடா’ என்னும் மாவட்டத்தில் தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அங்கு கடபா தாலுக்காவில் உள்ள பெனெல்லி என்னும் கிராமத்தில், செப்டம்பர் 2023-இல் இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரை நீதிபதி எம்.நாகபிரசன்னா ரத்து செய்தார்.

குற்றம்சாட்டப்பட்ட இருவரும் இரவில் மசூதிக்குள் நுழைந்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கங்களை எழுப்பிய காட்சிகள் சி.சி.டி.வி-யில் பதிவாகி இருந்தது.

By admin