• Wed. Oct 29th, 2025

24×7 Live News

Apdin News

கர்னூல் பேருந்து விபத்து: ஆந்திரா, தெலங்கானாவில் தீவிர சோதனை – வெளிச்சத்துக்கு வந்த தவறுகள் என்ன?

Byadmin

Oct 28, 2025


மோட்டார் வாகன விதி, தனியார் பேருந்துகள்

    • எழுதியவர், கரிகிபதி உமாகாந்த்
    • பதவி, பிபிசிக்காக

கர்னூலில் தனியார் பேருந்து தீ விபத்தில் 20 பேர் இறந்ததை அடுத்து, ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் தனியார் பேருந்துகளில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

விபத்து ஏற்பட்ட பின்னரே போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அவசரமாக ஆய்வுகளை மேற்கொள்வதாகவும், அதன் பிறகு அவர்கள் அதிக கவனம் செலுத்துவதில்லை என்ற விமர்சனங்களை போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.

இருப்பினும், கர்னூல் விபத்துக்கு முன்பு எப்போது, ​​எங்கு விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன என்று பிபிசி கேட்டபோது, ​​ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில அதிகாரிகள் சரியான பதிலைக் கொடுக்கவில்லை.

போக்குவரத்து வாகனங்களின் நிலை தொடர்பான அரசு ஆய்வு குறித்து ஆந்திர மாநில போக்குவரத்துத் துறையின் துணை போக்குவரத்து ஆணையர் புரேந்திராவை பிபிசி தொடர்பு கொண்டபோது, ​​தற்போது புயல் கண்காணிப்புப் பணிகளில் இருப்பதாகவும், பின்னர் தகவல்களை வழங்குவதாகவும் அவர் கூறினார். அவரிடமிருந்து தகவல்களை பெற்றவுடன் சேர்க்கப்படும்.



By admin