• Wed. Sep 24th, 2025

24×7 Live News

Apdin News

கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் சாப்பிட்டால் குழந்தைக்கு ஆபத்தா? – நிபுணர்கள் கூறுவது என்ன?

Byadmin

Sep 24, 2025


கர்ப்பிணிகள் பாரசிடமால் சாப்பிடுவது  கருவில் உள்ள குழந்தையை பாதிக்குமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உலகம் முழுவதும் மாபெறும் வரவேற்பை பெற்றுள்ள பாரசிடமால் மருந்து எப்படி வேலை செய்கிறதென்று நமக்கு தெரியாது

    • எழுதியவர், ஆண்ட்ரே பியர்மாத் & சாரா பெல்
    • பதவி, பிபிசி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம், கர்ப்பிணி பெண்கள் ‘பாரசிடமால்’ மருந்துகளை வலி நிவாரணியாக உட்கொள்வதை, கருவில் உள்ள குழந்தைகளுக்கு ஏற்படும் ஆட்டிசம் பாதிப்புகளோடு இணைக்கவிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது, மருத்துவ வழிகாட்டுதல்களுக்கு முரணான முடிவு ஆகும்.

வெள்ளிக்கிழமையன்று, ஊடகங்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ஆட்டிசம் குறித்து ஒரு “அற்புதமான” அறிவிப்பை வைத்திருப்பதாக செய்தியாளர்களிடம் கூறினார். “ஆட்டிசம் முற்றிலும் கட்டுப்பாட்டில் இல்லை… அதற்கான ஒரு காரணம் நம்மிடம் இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்” என்றார்.

சில ஆய்வுகள் கர்ப்பிணிப் பெண்கள் சிகிச்சைக்காக அசிடமினோபன் (பாராசிடமால்) எடுத்துக்கொள்வதற்கும் ஆட்டிசத்துக்கும் இடையே ஒரு சிறிய தொடர்பைக் காட்டியுள்ளன. ஆனால் இந்த கண்டுபிடிப்புகள் சீரானவை அல்ல, மேலும் இந்த மருந்தே ஆட்டிசத்தை ஏற்படுத்துவதாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

பாரசிடமால் என்றால் என்ன?

பாராசிடமால் (அமெரிக்காவில் டைலெனோல்) என்பது ஒரு வலி நிவாரணி மருந்து ஆகும். இந்த மருந்துக்கான மூலப்பொருள் அமெரிக்காவில் அசிடமினோபன் என்றும் பிற இடங்களில் பாராசிடமால் என்றும் அழைக்கப்படுகிறது.

By admin