• Tue. Apr 8th, 2025

24×7 Live News

Apdin News

கறுப்பு திங்கள்: இந்திய பங்குச் சந்தையில் ரூ 19 லட்சம் கோடி இழப்பு – இனி என்ன நடக்கும்?

Byadmin

Apr 7, 2025


இந்திய பங்குச் சந்தையில் ரூ 19 லட்சம் கோடி இழப்பு – இனி என்ன நடக்கும்?

பட மூலாதாரம், Getty Images

திங்கட்கிழமை இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் பங்குச்சந்தைகள் பெரும் சரிவைச் சந்தித்தன.

உலகம் முழுக்க, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு, ஏப்ரல் 2ம் தேதி இறக்குமதி வரி அறிவித்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

இந்த அறிவிப்பு உலகெங்கும் இருக்கும் பங்குச் சந்தைகளில் பெரிய விளைவை ஏற்படுத்தியது. இன்று, அந்த இறக்குமதி வரிகளின் விளைவால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் பங்குச்சந்தைகள் சரிவைச் சந்தித்தன.

டிரம்பின் அறிவிப்புக்குப் பிறகு முதலீட்டாளர்கள் ஒவ்வொரு நிமிடமும் பல லட்சம் கோடி ரூபாயை இழந்து வருகிறார்கள். இது எவ்வளவு காலம் தொடரும் என்பது உறுதியாகத் தெரியவில்லை.

By admin