• Sun. Apr 20th, 2025

24×7 Live News

Apdin News

கலைஞர் கைவினை திட்டம் சமூக நீதியை நிலைநாட்டும் : தொடக்கவிழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல் | Kalaignar Craft Project will uphold social justice says Stalin

Byadmin

Apr 20, 2025


சென்னை: குலக்​கல்​வியை ஊக்​கு​வித்​த​தால் விஸ்​வகர்மா திட்​டத்தை எதிர்த்த​தாக​வும், ‘கலைஞர் கைவினைதிட்​டம்’ சமூக நீதி, சமநீ​தி, மனித நீதியை நிலை​நாட்​டும் திட்​ட​மாக இருப்​ப​தாக​வும் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​தார்.

காஞ்​சிபுரம் மாவட்​டம், குன்​றத்​தூர், சேக்​கிழார் அரசு ஆண்​கள் மேல்​நிலைப் பள்ளி வளாகத்​தில், ‘கலைஞர் கைவினை திட்​ட’த்தை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று தொடங்கி வைத்​தார்.

இந்​நிகழ்ச்​சி​யில் முதல்​வர் பேசி​ய​தாவது: ‘கலைஞர் கைவினை திட்​டம்’ சமூக நீதி, சமநீ​தி, மனித நீதி, மனித உரிமை நீதியை நிலை​நாட்​டக் கூடிய திட்​ட​மாகும். மத்​திய பாஜக அரசு கடந்த 2023-ம் ஆண்டு ‘விஸ்​வகர்​மா’ திட்​டத்தை கொண்​டு​வந்​தது. 18 வகை​யான கைவினைக் கலைஞர்​களுக்​கு, திறன் பயிற்சி வழங்​கி, ரூ.3 லட்​சம் வரை கடன் வழங்​கும் திட்​டம் என்று கூறினர்.

எந்​தத் திட்​ட​மாக இருந்​தா​லும், அது சமூகநீ​தி​யை, சமத்​து​வத்தை நிலை​நாட்​டும் நோக்​கத்​துடன் இருக்க வேண்​டும். ஆனால், அந்​தத் திட்​டம், குலத்​தொழில்முறையை வெளிப்​படை​யாக ஊக்​கு​விப்​ப​தாக இருந்​த​தால் அதை கடுமை​யாக எதிர்த்​தோம்.

புது​மைப் பெண், தமிழ்ப் புதல்​வன் போன்ற திட்​டங்​கள் மூலம் பள்ளி முடித்த அனை​வரும் உயர்​கல்விக்​குப் போவதை உறுதி செய்ய வேண்​டும் என்று நாம் பாடு​படு​கிறோம். ஆனால், பாஜக அரசோ குலத் தொழிலை ஊக்​குவிக்​கப் பாடு​படு​கிறது. ‘நான் முதல்​வன்’ திட்​டத்​தில், எதிர்​கால உலகத்தை எதிர்​கொள்​ளத் தேவை​யான திறன் பயிற்​சிகளை கொடுத்​து, நம்​முடைய குழந்​தைகள் பெரிய, பெரிய நிறு​வனங்​களில் உயர் பொறுப்​பு​களில் வேலை செய்​ய​ வேண்​டும் என்று நினைக்​கிறோம். ஆனால், குடும்​பத் தொழிலில் பயிற்சி கொடுத்​து, அவர்​கள் வெளி உலகத்​தையே பார்க்​கக் கூடாது என பாஜக நினைக்​கிறது.

எனவே, அத்​திட்​டத்​தில் முக்​கிய மாற்​றங்​களைச் செய்ய வலி​யுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழு​தினேன். அதை ஏற்க மறுத்​து​விட்​டனர். இதனால், பிரதமரின் ‘விஸ்​வகர்​மா’ திட்​டத்தை தமிழக அரசு செயல்​படுத்​தாது என்று தெரி​வித்து விட்​டோம். அதைத்​தொடர்ந்​து, பாகு​பாடு காட்​டாத ஒரு திட்​ட​மாக உரு​வானது​தான் ‘கலைஞர் கைவினைஞர் திட்​டம்’. இதில் 25 வகை​யான திட்​டங்​கள் சேர்க்​கப்​பட்​டுள்​ளன. விரும்​பிய தொழிலை யார் வேண்​டு​மா​னாலும் செய்​ய​லாம்.

இந்​தத் திட்​டத்​தில், ரூ.50 ஆயிரம் முதல் ரூ.3 லட்​சம் வரை மானி​யத்​துடன் கடன் வழங்​கப்​படு​கிறது. இது​வரை 24,907 விண்​ணப்​பங்​கள் வந்​துள்​ளன. வங்​கி​களுக்கு பரிந்​துரைக்​கப்​பட்​டு, 8,951 பயனாளி​களுக்கு ரூ.170 கோடி கடன் ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டுள்​ளது. தமிழகம் இன்று மாபெரும் வளர்ச்​சியை பெற்​றிருக்​கிறது என்று சொன்​னால், பெரிய நிறு​வனங்​களால் மட்​டுமே இந்த வளர்ச்சி வந்​து​விட​வில்​லை. சிறு, குறு, நடுத்தர நிறு​வனங்​களாலும்​தான் இந்த வளர்ச்​சியை நாம் சாத்​தி​ய​மாக்கி இருக்​கிறோம்.

கடந்த 10 ஆண்​டு​களில் இல்​லாத அளவுக்கு குறு, சிறு நடுத்தர நிறு​வனங்​கள் வளர்ந்​துள்​ளன. அவை பெருந்​தொழில்​களுக்கு துணை​யாக இருந்து நாட்​டின் ‘இன்க்​ளூசிவ்’ மற்​றும் ‘ஆல்​-ர​வுண்ட்’ சமூக வளர்ச்​சிக்கு குறிப்​பிடத்​தக்க பங்​களிக்​கிறது. உள்​ளூர் வளங்​களைப் பயன்​படுத்தி அந்​தப் பகுதி மக்​களுக்கு வேலை​வாய்ப்பு வழங்​கு​வ​தால், மக்​கள் வேலை​தேடி தொலை​தூரங்​களுக்கு இடம் பெயர்​வது பெரு​மளவு தடுக்​கப்​படு​கிறது.

இந்த தொழில் நிறு​வனங்​கள் எண்​ணிக்​கை​யில், இந்​தி​யா​விலேயே 3-வது இடத்​தில் தமிழகம் உள்​ளது. தமிழகத்​தில் 33 லட்​சம் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறு​வனங்​கள் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளன. இந்​தி​யா​வின் மொத்த எண்​ணிக்​கை​யில் இது 9.4 சதவீதம்.

கைவினைக் கலைஞர்​களு​டைய வாழ்​வா​தா​ரத்​தைப் பாது​காத்து அவர்​கள் வளர்ச்​சிக்​காக, ‘பூம்​பு​கார்’ நிறு​வனத்தை முதல்​வ​ராக இருந்த கருணாநிதி கடந்த 1973-ல் ஆண்டு தொடங்கி வைத்​தார். 2025-ல் அவர் பெயரில் ‘கலைஞர் கைவினை திட்​ட’த்தை நான் தொடங்கி வைக்​கிறேன். ஏதோ தொழில் தொடங்​கினோம், வாழ்க்​கையை நடத்​தினோம் என்று இல்​லாமல், நிறைய பேருக்​கு வேலை​வாய்ப்​பு வழங்​கும்​ அளவுக்​கு நீங்​கள்​ உயர வேண்​டும்​. இவ்​வாறு முதல்​வர்​ பேசி​னார்​.



By admin