• Wed. Jan 21st, 2026

24×7 Live News

Apdin News

கல்யாணி நம்பி: மதுரை எல்ஐசி பெண் மேலாளர் கொலையை கண்டறிய உதவிய கடைசி ஃபோன் கால் – சக ஊழியர் சிக்கியது எப்படி?

Byadmin

Jan 21, 2026


எல்.ஐ.சி பெண் மேலாளர் கொலையை கண்டறிய உதவிய கடைசி ஃபோன் கால் – சக ஊழியர் சிக்கியது எப்படி?

பட மூலாதாரம், FACEBOOK

படக்குறிப்பு, கல்யாணி நம்பி

“எல்ஐசி-யில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக என் அம்மா வேலை பார்த்தார். எந்த வேலை கொடுத்தாலும் அர்ப்பணிப்புடன் செய்து முடிப்பார். குடும்பத்தின் வேராக அவர் இருந்தார். அவருக்கு இப்படியொரு கொடூரம் நேரும் என எதிர்பார்க்கவில்லை” என்கிறார், லட்சுமி நாராயணன்.

மதுரையில் எல்.ஐ.சி கிளை மேலாளராகப் பணியாற்றி வந்த இவரது தாய் கல்யாணி நம்பி, கடந்த டிசம்பர் 17-ஆம் தேதியன்று கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில் உதவி நிர்வாக அலுவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் நடந்தது என்ன?

பெண் ஊழியரின் கடைசி அழைப்பு

மதுரை எல்.ஐ.சி கிளை அலுவலகத்தில் கடந்த டிசம்பர் 17ஆம் தேதியன்று இரவு தீ ஏற்பட்டது. இதில் கிளை மேலாளர் கல்யாணி நம்பி உயிரிழந்தார். அதே அலுவலகத்தில் பணியாற்றும் உதவி நிர்வாக அலுவலர் ராம் என்பவரும் படுகாயமடைந்தார்.

விபத்து என்ற கோணத்தில் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வந்தது.

By admin