• Wed. Apr 16th, 2025

24×7 Live News

Apdin News

கல்லூரி விழாவில் ஜெய் ஸ்ரீராம் கோஷம்: சர்ச்சையில் தமிழ்நாடு ஆளுநர் – என்ன நடந்தது?

Byadmin

Apr 15, 2025


ஆளுநர், ஆர்என் ரவி, கம்பன் கழக விழா, ஜெய்ஸ்ரீராம்

பட மூலாதாரம், Rajbhavan, Tamilnadu

மதுரையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என மாணவர்களை கோஷமிடச் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் பொறியியல் கல்லூரியில் கம்பர் குறித்த பேச்சுப் போட்டிக்கான பரிசளிப்பு விழா ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெற்றது.

அந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்று பரிசுகளை வழங்கினார். இந்த விழாவில் உரை நிகழ்த்திய ஆளுநர், தனது உரையின் முடிவில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற கோஷங்களை எழுப்பி, மாணவர்களையும் அந்தக் கோஷங்களை எழுப்பும்படி கூறினார். பங்கேற்பாளர்களும் திரும்பவும் அந்த கோஷங்களை எழுப்பினர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், அது சர்ச்சையாக உருவெடுத்திருக்கிறது.

விழாவின் பின்னணி

‘கல்விக் கூடங்களில் கம்பர்’ என்ற பெயரில் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்களுக்கும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் மாநில அளவிலான பேச்சுப் போட்டிகள் நடந்துவந்தன.



By admin