• Fri. Aug 8th, 2025

24×7 Live News

Apdin News

களுத்துறையில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர் கைது!

Byadmin

Aug 7, 2025


சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று புதன்கிழமை (06) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் களுத்துறை வடக்கு, கல்பாத்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்  கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் கல்பாத்த பிரதேசத்தில் வசிக்கும் 48 வயதுடையவர் ஆவர். சந்தேக நபரிடமிருந்து 3,060 வெளிநாட்டு சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்  மேலதிக விசாரணைகளுக்காக களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

The post களுத்துறையில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர் கைது! appeared first on Vanakkam London.

By admin