• Sun. Nov 2nd, 2025

24×7 Live News

Apdin News

‘கழுதைப் பாதை’ வழியாக அமெரிக்கா சென்ற இந்தியர்களின் துயரக் கதை

Byadmin

Nov 1, 2025


நாடு கடத்தப்பட்டவர்களில் ஒருவரின் புகைப்படம்

பட மூலாதாரம், Kamal Saini

படக்குறிப்பு, நாடு கடத்தப்பட்டவர்களில் பலர் 25 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் ஹரியாணாவைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்

அமெரிக்காவிலிருந்து சமீபத்தில் நாடு கடத்தப்பட்ட பல சட்டவிரோத இந்தியக் குடியேற்றத் தொழிலாளர்கள் பிபிசி பஞ்சாபியிடம் தங்கள் அவமானம், கடன் மற்றும் தகர்ந்த கனவுகள் என துயரத்தை பகிர்ந்துள்ளனர்.

சட்டவிரோத ஆள் கடத்தலை எளிதாக்கக் கடத்தல்காரர்களால் பயன்படுத்தப்படும் “கழுதைப் பாதை” (Donkey Route) என்ற பாதை வழியாக அமெரிக்காவிற்குள் நுழைந்த குறைந்தது 54 பேர், கடந்த ஞாயிற்றுக்கிழமை நாட்டின் தலைநகர் டெல்லியில் தரையிறங்கினர்.

25 முதல் 40 வயதுக்குட்பட்ட இவர்கள் அனைவரும் வட மாநிலமான ஹரியாணாவைச் சேர்ந்தவர்கள், அவர்கள் வீடு திரும்பிவிட்டனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்களின் நாடு கடத்தல் குறித்து இந்திய அரசு கருத்துத் தெரிவிக்கவில்லை.

ஆனால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான ஆட்சியில் சட்டவிரோத குடியேறிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், இவ்வருடம் மட்டும் 2,400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

பல ஆண்கள், குறிப்பாகத் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள், பல எல்லைகளைக் கடந்து செல்லும் “கழுதைப் பாதை” என்று அழைக்கப்படும் வழிகள் மூலம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்குச் செல்லக் கடுமையான பயணங்களை மேற்கொள்கின்றனர்.



By admin