1,000க்கும் மேற்பட்ட வீரர்கள்
சலீம் அல் அஷ்கரின் மரணத்தை அடுத்து, பாலஸ்தீன கால்பந்து சங்கம் புள்ளிவிவரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் காசாவில் போர் தொடங்கியதில் இருந்து, இஸ்ரேலிய படைகளின் தொடர் தாக்குதல்களால் 1,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீன விளையாட்டு வீரர்கள் மற்றும் தடகளப் பயிற்சியாளர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
சலீம் அல்அஷ்கரின் திடீர் மறைவால் வாடும் அவரது மனைவி, பெற்றோருக்கு சர்வதேச விளையாட்டு அமைப்புகள் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றன.