0
காசா உதவி மையம் அருகே இஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டில் பதினைந்து பேர் கொல்லப்பட்டதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய காசாவில் உள்ள உதவி விநியோக மையம் அருகே கூடியிருந்தபோது இஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 15 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவால் ஆதரிக்கப்படும் காசா மனிதாபிமான அறக்கட்டளையால் நடத்தப்படும் ஒரு முகாமுக்கு அருகில் இவ்வாறு மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அல்-அக்ஸா மற்றும் அல்-அவ்தா மருத்துவமனைகளின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும், அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியதாக நம்பும் ஒரு குழு மீது எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
படம் – BBC